Saturday 5 November 2011

சிங்களவர்கள் மத்தியில் '7 ஆம் அறிவு' : ஏகப்பட்ட வெட்டுகளுக்கு பின் ரிலீஸ்?

7 ஆம் அறிவு படம் குறித்து வெவ்வேறு நல்ல அபிப்ராயங்கள் இருந்தாலும், ஏகோபித்த பாராட்டு அப்படத்தில் இடம் பெறும் தமிழன் குறித்த வசனங்களுக்குதான். ஒட்டுமொத்த தியேட்டரும் கைதட்டி ஆர்ப்பரிக்கும் அந்த காட்சிகளில் வசனத்தை ஒப்புக்கு ஒப்பிக்காமல் உணர்ச்சி பிழம்பாக உச்சரித்திருக்கிறார் சூர்யா. இவ்வளவு பேசிய பின் அந்த படத்தை இலங்கையில் வெளியிட வேண்டும் என்று எதிர்பார்த்தால் நடக்குமா? படத்தில் முக்கியமாக இலங்கையில் ஒ‌ன்பது நாடுகள் சேர்ந்து நடத்திய போரை எப்படி வீரம் என்று சொல்ல முடியும் என்ற வசனம் இடம்பெற்றிருந்தது. இதற்கு இலங்கை சிங்களவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது சர்ச்சைக்கு‌ரிய இந்த வசனங்களை நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் அந்நாட்டு அரசின் தணிக்கை குழு புத்தருக்கு இணையானவர் போதிதர்மர் என்ற வசனத்தையும், திருப்பி அடிக்கணும் என்ற வசனத்தையும் நீக்கிவிட்டதாக தெரிகிறது. 

No comments:

Post a Comment