Sunday 6 November 2011

வேலாயுதம் படம் பார்த்தால் பிரச்சனை வரும் என ஒதுங்கிய ரஜினிகாந்த்


நின்றால் குற்றம்நடந்தால் குற்றம் என்பவர்களுக்கு மத்தியில் நிம்மதியே உன் விலை என்ன என்றுதான் கேட்க முடியும் போலிருக்கிறது. சராசரி மனிதர்களை கூட விட்டுவைக்காத இந்த பிரச்சனைகள் சமுதாயத்தில் உச்சாணிக் கொம்பில் இருப்பவர்களை எப்படியெல்லாம் புரட்டிப் போடும்?

பின்வரும் விஷயத்தை கேட்டால் புரிந்து கொள்வீர்கள். 7 ஆம் அறிவு பார்த்த சில தினங்களில் வேலாயுதம் படத்தையும் பார்க்க பிரியப்பட்டாராம் சூப்பர் ஸ்டார் ரஜினி. இத்தனைக்கும் 7 ஆம் அறிவு பார்க்க வரவேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தவர் சூர்யாவின் மனைவி ஜோதிகாதான். ஆனால் வேலாயுதத்தை ரஜினியே விரும்பி பார்க்க ஆசைப்பட்டாராம்.

உடனே ஒரு தேதியையும் முடிவு செய்து ப்ரீவியூ தியேட்டரையும் தயாராக வைத்திருந்தார்கள். இந்த நேரத்தில் கன்னடர்களில் சிலர் கூட்டமாக சேர்ந்து வேலாயுதம் தியேட்டர்களில் கலாட்டா செய்தனர். கன்னட ரக்ஷண வேதிகே என்ற அமைப்பின் இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போனார்கள் வேலாயுதம் படத்தின் விநியோகஸ்தர்கள்.

இந்த நேரத்தில் வேலாயுதம் படத்தை பார்க்கப் போனால்அதுவும் சர்ச்சைக்குள்ளாக்கப்படும் என்பதை புரிந்து கொண்டுசட்டென்று படம் பார்க்க வருகிற நிகழ்ச்சியை கேன்சல் செய்தாராம் சூப்பர் ஸ்டார். குற்றம் செய்ய துடிக்கிற ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நாம் ஏன் துணை போவானேன் என்று கூட நினைத்திருக்கலாம் அல்லவா..

No comments:

Post a Comment